சங்கரன்கோவில். மே.4.
சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் வைத்து நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். தலைமை தீர்மான குழு உறுப்பினர் சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யூஎஸ்டி சீனிவாசன், பரமகுரு , மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம்,மாவட்ட அவைத் தலைவர் பத்மநாதன், தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஶ்ரீ குமார் முன்னிலை வகித்தனர். இதில் வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா, ஒன்றிய செயலாளர் லாலாசங்கரபாண்டியன் சங்கரன்கோவில் பிரகாஷ், சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, புளியங்குடி நகர் மன்ற தலைவர் விஜயா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை வார்டு நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.