தேனி மாவட்டம், 15.08.2026
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் மரு. இரா. வைத்திநாதன், IAS தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டதுடன், சுதந்திரப் போராட்டத் தியாகிகள், மொழிப்போர் தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
விழாவில் 160 பயனாளிகளுக்கு ரூ.2.30 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சிறப்பாக செயல்பட்ட 16 நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 269 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ். பிரவீன் கௌதம், IPS முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், காவல்துறை, நீதித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்



