தஞ்சாவூர், ஜூலை 31 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் 449 பள்ளி களில்விழிப்புணர்வு மன்றங்கள் மூலமாக போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ரேவதி கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 449 அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களை கொண்டு போதை பொருள்களால் ஏற்படும் கடுமையான பாதிப்புகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போதை பொருள் தடுப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு மன்றம் செயல்பட்டு வருகிறது.
இந்த மன்றங்களின் மூலம் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் மூலம் போதை பொருள்களால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளை சுற்றி இரு 200 மீட்டர் சுற்றளவில் போதை பொருட்கள் விற்பனையை தடை செய்யும் இடமாக அரசால் அறிவிக் கப்பட்டு போதை பொருள்கள் தடை செய்யப்பட்ட பகுதி என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 300 பள்ளிகளில் இந்த பணி முடிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள பள்ளிகளில் நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களின்படி கல்வித்துறையால் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது பள்ளிகளில் இளம் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அத்துடன் போதை பொருள்களில் தீங்குகள் குறித்து சுவரொட்டிகள் மற்றும் பிற விழிப்புணர்வு பதாகைகள் பள்ளி வளாகத்திற்கு காட்சிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள DRUG FREE TN என்ற அலைபேசி செயலி மூலம் தங்கள் அருகாமையை கடைகளில் போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் நடமாட்டம் குறித்து பொது மக்கள் தங்களின் சுய விவரங்களின்றி புகார் செய்யலாம் என்பது தொடர்பாகவும் போதைப் பொருள்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வித்துறை மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



