திருவள்ளூர், ஜூலை 28 –
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளியுடன் வரும் துணையாளரே வீல் சேர் தள்ளிக் கொண்டு போகணும் கேட்டா ஆள் இல்லைன்னு சொல்றாங்க இது வாடிக்கையான வேலையானது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு இது தலைமை மருத்துவமனை ஆகும். இங்கு ஒரு நாளைக்கு 1000-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட உள்நோயாளிகளும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லாததால் நோயாளிகள் மற்றும் அவளுடன் வரும் துணையாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அடித்தளத்தில் வெளி நோயாளி சீட்டு பெற்று நோய் ஏற்ப ஏற்ப ஐந்து மாடி உயரத்துக்கு சென்று மருத்துவரை பார்க்க வேண்டும். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் நடக்க முடியாத நிலையில் வருபவர்கள் அவர்களுக்கு வீல் சேர் மூலம் மருத்துவ இடம் கொண்டு போக மருத்துவ உதவியாளரையே இல்லை. இதனால் நோயாளியுடன் வந்த துணையாளரே அந்த வீல் சேரை தள்ளிக் கொண்டு போவதால் நோயாளியை எங்கு கவிழ்த்து விடுவார் என்ற அச்சுத்துடன் அந்த வீல் சேரில் அமர வைத்து தள்ளிக் கொண்டு போவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கண்டுகொள்ளுமா அரசு? சமூக ஆர்வலர்கள் கோரிக்கை



