சுசீந்திரம், நவ. 3 –
பள்ளம் பகுதியைச் சார்ந்தவர் தெரசாள் (48). இவரது கணவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகன்கள். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகன் ஜஸ்டின் (21) இவரை கவனித்து வந்துள்ளார். கடந்த 2ஆம் தேதி தனது தாயாரை வீட்டில் தேடிய போது வீட்டின் சமையலறையில் தெரசாள் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறியுள்ளார். இது குறித்து ஜஸ்டின் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


