திருப்பத்தூர், மே 28 –
திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரம் துணைமின்நிலைய வணிக மேற்பார்வையாளர் விஜயகுமார் பணிநிறைவு பெற்றதையடுத்து அவருக்கு பாராட்டுவிழா திருப்பத்தூர் ரோட்டரி சங்க தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
சங்க செயலாளர் இரவிவர்மன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பணிநிறைவு பெற்ற விஜயகுமார் மற்றும் அவர் மனைவி விமலா ஆகியோருக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மின்வாரிய செயற் பொறியாளர் அருள்பாண்டியன் பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசினை வழங்கினார்.
விழாவில் ரோட்டரி சங்க பயிற்றுநர் ஏலகிரிசெல்வம், சுப்ரமணியன், டாக்டர் லீலா சுப்ரமணியன், எழிலரசன், ரோட்டரி உதவி ஆளுநர் ஆனந்தன், ஆசிரியர் சங்கர், வருமாண்டுத் தலைவர் வெங்கடாசலம், ரங்கநாதன், ஆஞ்சி, மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகள் ஞானபிரகாசம், ஜோதி, ஞானசேகரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். விழா முடிவில் ரோட்டரி சங்க பொருளாளர் அருண்குமார் நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்ட ஐநூறுக்கும் மேற்பட்டோருக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.



