விளாத்திகுளம், மே 27 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் சுமார் 260 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்துள்ளதாகவும் அதனை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மற்றும் புரட்சி பாரதம் கட்சி சார்பில் மனு வழங்கப்பட்டது.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக வடக்கு மாவட்ட செயலாளர் பாபு, புரட்சி பாரதம் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் லெனின் குமார் ஆகியோர் விளாத்திகுளம் பத்திரப்பதிவு அலுவலர் ஆதிலட்சுமியிடம் மனுவை வழங்கினர். இந்நிகழ்வில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



