By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கடைமடைக்கு தண்ணீர் செல்லாததால் குமரியில் நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடைமடைக்கு தண்ணீர் செல்லாததால் குமரியில் நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
கனஂனியாகுமரி

கடைமடைக்கு தண்ணீர் செல்லாததால் குமரியில் நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

Last updated: June 20, 2025 5:47 pm
June 20, 2025
34 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 20 –

குமரி மாவட்டத்தில் தற்போது கன்னிப்பூ சாகுபடி பணி வேகமாக நடந்து வருகிறது. சாகுபடி பணிக்காக கடந்த 1-ம் தேதி மாவட்ட நிர்வாகம் பேச்சுப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டது. தண்ணீர் திறப்பு மற்றும் மாவட்டத்தில் மழை பெய்ததால் சாகுபடி செய்யாமல் இருந்த பல்வேறு பகுதிகளில் சாகுபடி பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். குமரி மாவட்டத்தில் பறக்கை, சுசீந்திரம், தேரூர், வடசேரி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி பணி முடிந்துவிட்டது. மற்றப் பகுதியில் தற்போது வேகமாக சாகுபடி பணிகள் நடந்து வருகிறது. சில இடங்களில் தற்போது நாற்றங்கால் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு இயந்திரம் கொண்டு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அறிவித்துள்ளது. அதன்படி 1 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்தால் ரூ.4 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் இயந்திர நடவு பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் ஒரு குவிண்டால் நெல்லிற்கு ரூ.2,400 முதல் ரூ.2,450 வரை கிடைத்து வருகிறது. நெல்லிற்கு தற்போது நல்ல விலை கிடைப்பதால் நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பேச்சுப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைமடையை சென்று சேரவில்லை. இதனால் கடைமடைப் பகுதியில் சாகுபடி பணி நடப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தெங்கம்புதூர் சானலில் தண்ணீர் செல்லாததால் தெங்கம்புதூர் பகுதியில் உள்ள வயல்களில் சாகுபடி பணியை மேற்கொள்ள முடியாமல் உள்ளது. இது குறித்து விவசாயி கூறியதாவது: தற்போது கடந்த 1-ம் தேதி தண்ணீர் திறந்து விட்டும் தெங்கம்புதூர் சானலில் கடைவரம்பு பகுதிக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக பறக்கைப் பகுதியில் சாகுபடி பணி முடிந்துள்ளது. இதுபோல் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியிலும் சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வேளையில் நாங்களும் சாகுபடி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தெங்கம்புதூர் கடை வரம்பு பகுதிக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

கோடை விடுமுறையை ஒட்டி கன்னியாகுமரியில் கூடுதல் ஒரு மணி நேரம் படகு சேவை நீட்டிப்பு
ஆண்டிவிளையில் மாநில அளவிலான வாலிபால்
மார்த்தாண்டம் அருகே கடையில் பேட்டரிகள் திருடிய 3 பேர் கைது
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அகஸ்தீஸ்வரத்தில்காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

எம் எல் ஏ ராஜ்குமார் அங்கன்வாடி கட்டிடம் அமைப்பதற்கான அடிக்களை நாட்டினார்.

May 9, 2025
42 Views
குமரியில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவு
திருவையாறு காவிரி கரையில் ஆடி அமாவாசை; புனித நீராடிய பக்தர்கள்
புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம்!!
விநாயகர் சிலை கரைப்பதை தடுத்த கிறிஸ்தவ குடும்பத்தினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account