திருச்சி, ஏப். 24 –
திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த முகமது யாசின், ஆனந்த், ராஜ்குமார், சந்தியாகு ராஜன் ஆகிய நால்வரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 130 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேல அம்பிகாபுரம், பொன்மலைப்பட்டி, எடமலைப்பட்டி புதூர் போன்ற பகுதிகளில் இவர்கள் மதுபானங்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.



