தஞ்சாவூர், ஜூன் 12 –
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே திரைப்பட இயக்குனரும், தமிழர் உரிமைப் போராளியுமான பாரதிராஜாவின் மறைவையொட்டி தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன் தலைமை வைத்தார். இதில் பாரதி ராஜா படத்திற்கு அனைவரும் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
நிகழ்வில் காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் மணிமொழியன், தமிழ் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் வைகறை, தலைமை குழு உறுப்பினர் ராஜேந்திரன், தென்னவன், மாநகர செயலாளர் ராமசாமி, முனியாண்டி, நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் அன்பரசன், வள்ளலார் பணியகத் தலைவர் சுந்தரராமன், மகளிர் ஆயம் துணைத் தலைவர் செம மலர், காவிரி உரிமை மீட்பு குழு வெள்ளம் பெரம்பூர் ரமேஷ், வணிகர் சங்க பேரவை மாநகர செயலாளர் ஜெயக்குமார், பேராசிரியர் தமிழடியான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



