தஞ்சாவூர், ஜூன் 9 –
தாய்மொழி மட்டுமல்ல, மொழிகளின் தாயாக விளங்கும் மொழி நம்தமிழ் மொழி. அந்த தமிழ் மொழியின் தனித்துவத்தை தனது அடையாளமாக தனது மொழி நயத்தாலும் கற்பனை வளத்தாலும் அதன் சுவையாலும் எல்லோரையும் ஈர்த்த பெருங்கவிஞன் கம்பன். அந்தக் கம்பன் வடித்த காவியம் இராமாயணம்.
கம்ப ராமாயணத்தையும் கம்பனையும் போற்றும் வகையில் உலகெங்கிலும் கம்பன் கழகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு நம் மொழியும் நமது கலாச்சாரமும் முன்னெடுத்துச் செல்லப்பட்டு மொழிக்கு பெருமை சேர்க்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக 28 ஆண்டுகளுக்கு முன்பே தஞ்சாவூரில் பல தமிழ் அறிஞர்களின் முயற்சியால் நிறுவப்பட்டு மறைந்த மேனாள் அமைச்சர் உபயதுல்லா தலைமையில் தொடர்ந்து இயங்கி தமிழ்ப்பணியை செய்து வந்தது கம்பன் கழகம்.
இந்நிலையில் அவர்களின் இழப்பை அடுத்து ஏற்கெனவே அவர்கள் முன்மொழிந்ததன்படி
சிறந்த செயற்பாட்டாளரும் நிர்வாகத் திறனாளருமான மனித நேயப் பண்பாளர் வழக்குரைஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் தஞ்சாவூர் கம்பன் கழகத்தின் அனைத்து உறுப்பினர்களின் அன்பான அழைப்பை ஏற்றுக்கம்பன் கழக நிர்வாகிகள் தேர்வில் கலந்து கொண்டார். வழக்குரைஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொறுப்பை ஏற்று அவர் உரையாற்றும் போதுகம்பன் கழகத்தை மேம்படுத்தும் பலவகையான ஆலோசனைகளை வழங்கி கழகத்திற்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளித்தார்.



