தென்தாமரைகுளம், மார்ச் 2 –
தென்தாமரைகுளம் அருகே உள்ள விஜயநகரி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (63), தொழிலாளி. இவர் தினமும் காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். சம்வத்தன்று வேலைக்குச் சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இரவு வெகுநேரமாகியும் வராததால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அடுத்தநாள் மதியம் கரம்பவிளை அருகே உள்ள கோட்டையடி கால்வாயில் சைக்கிளுடன் செல்வராஜ் கிடப்பதாக அவரது மகன் ராஜ சுபாசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் உறவினர்களுடன் சம்பவ இடம் சென்று பார்த்த போது, செல்வராஜ் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து தென்தாமரைகுளம் போலீசில் ராஜ சுபாஷ் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


