தென்தாமரைகுளம், மார்ச் 30 –
தென்தாமரைகுளம் இந்து நாடார் சமுதாய வகை பத்திரகாளி அம்மன் கோவில் கொடைவிழா நாளை செவ்வாய்க்கிழமை 31-ம் தேதி தொடங்கி நாளை மறுநாள் 1-ம் தேதி வரையும், ஆலடி செங்கிடாகார சுவாமி மற்றும் கட்டையேறும் பெருமாள் சுவாமி கோவில் கொடைவிழா 7_ம் தேதி செவ்வாய் கிழமையும் நடைபெறுகிறது.
பத்திரகாளியம்மன் கோயில் கொடைவிழாவின் முதல் நாளான நாளை 31-ம்தேதி மாலை 4 மணிக்கு கடல்தீர்த்தம் கொண்டு வருதல்,5.30 மணிக்கு பெரியம்மன்கோவிலில் பொங்கல் வைத்து வழிபடுதல், 6 மணிக்கு பத்திரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு ஏற்றுதல், இரவு 7 மணிக்கு நாதஸ்வர இசை, 9.30 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சக்தி விநாயகருக்கு பூஜை, 11.30 மணிக்கு அனந்தசயனருக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு பத்திரகாளி அம்மனுக்கு பூஜை, பின்னிரவு 12.30 மணிக்கு உச்சினி மாகாளி அம்மனுக்கு பூஜையும் நடக்கிறது.
இரண்டாம் நாளான நாளை மறுநாள் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு நாதஸ்வர இசை, 9.30 மணிக்கு வில்லிசை, நண்பகல் 12 மணிக்கு அனந்தசயனருக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு சமபந்தி விருந்து, 1 மணிக்கு பத்திரகாளி அம்மனுக்கு தீபாராதனை, பிற்பகல் 1.30 மணிக்கு உச்சினி மாகாளி அம்மனுக்கு தீபாராதனை, 3 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 7.30 மணிக்கு நாதஸ்வர இசை, 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு கருங்கிடாகார சுவாமிக்கு தீபாராதனை, 1 மணிக்கு கான்ஷா சுவாமிக்கு தீபாராதனை, பின்னிரவு 3 மணிக்கு மூர்த்திமாட சுவாமிக்கு தீபாராதனை, அதிகாலை 5.30 மணிக்கு பிரசாதம் வழங்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.
இதேபோல் அடுத்தமாதம் 7ம் தேதி செவ்வாய்கிழமை ஆலடி சிவ செங்கிடாகராசுவாமி மற்றும் கட்டையேறும் பெருமாள் சுவாமி கோயில் கொடைவிழா நடைபெறுகிறது. விழவன்று மாலை 4 மணிக்கு கடல் தீர்த்தம் கொண்டு வருதல், 6.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், இரவு 7.30 மணிக்கு நாதஸ்வர இசை, 8.30 மணிக்கு வில்லிசை, 9.30 மணிக்கு நாராயணசுவாமிக்கு பூஜை, 10.30 மணிக்கு சிவசெங்கிடாகார சுவாமிக்கு பூஜை, 11 மணிக்கு கபாலகாரி அம்மனுக்கு பூஜை, பின்னிரவு 2 மணிக்கு கட்டையேறும் பெருமாள் சுவாமிக்கு பூஜை, 3 மணிக்கு பூக்குழி வழிபாடு, அதிகாலை 5 மணிக்கு தானதர்மங்களுடன் விழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் ஆலய அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.



