தருமபுரி, ஜூன் 04 –
தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் புகழேந்தி மற்றும் செய்தி தொடர்பாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், நந்தகுமார், இணைச் செயலாளர் சிங்காரவேலு, துணைச் செயலாளர் அருண்குமார், செயற்குழு உறுப்பினர்கள் பாலு, ஜெயம் சுரேஷ், பெரியசாமி, சங்க உறுப்பினர்கள் இளம்பரிதி, ஸ்ரீனிவாசன், வெங்கடேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் மாவட்ட செய்திமக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்தனர்.
அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காலி வீட்டுமனையில் மத்திய அல்லது மாநில அரசின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடு கட்டிதருதல், வீட்டுமனைப் பட்டா வழங்காமல் விடுபட்ட, மாவட்ட மற்றும் தாலுக்காவில் பணிபுரியும், பத்திரிகையாளர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்குதல், நலவாரிய அட்டை வழங்காமல் விடுபட்ட மாவட்ட மற்றும் தாலுகாவில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களுக்கும் நலவாரிய அட்டை வழங்குதல், மறைந்த கலைஞர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் வேணுகோபால் அவர்களின் திருவுருவப் படத்தினை பத்திரிகையாளர் அலுவலகத்தில் திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்துதல்,
மாவட்டத்தில் மற்றும் தாலுகாவில், பத்திரிக்கையாளர் என்ற பெயரில் பொய்யான செய்திகளை பரப்பி, பத்திரிக்கையாளர்களின் பெயருக்கு அவதூறு பரப்பி உலாவரும் போலி பத்திரிகையாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
விடுபட்ட தகுதியுள்ள பத்திரிக்கையாளர்களுக்கு அரசு பேருந்து அடையாள அட்டை வழங்குதல், பத்திரிகையாளர்களுக்கு இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான அரசு ஸ்டிக்கர் வழங்குதல், பத்திரிக்கையாளர்களை பெரிய நிறுவனம், சிறிய நிறுவனம் என்றும் தாலுகா மற்றும் மாவட்ட செய்தியாளர் என்றும் பாகுபாடு இன்றி அனைவருக்கும் உரிய மதிப்பினை வழங்குதல், அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களின் கார்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட சுங்க சாவடியில் இலவசமாக சென்று வர அனுமதி பெற்று தருதல் உள்ளிட்ட கோரிக்கை மனுவை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள், செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.



