திருவட்டார், அக். 6 –
குமரி மேற்கு மாவட்டம் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆற்றூர் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதர்ஷன் தலைமை தாங்கினார். மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் மனோ முன்னிலை வகித்தார்.
குமரி மேற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக பூத் வாரியாக பொறுப்பாளர்களுக்கு பயிற்சி மாநில அமைப்பு செயலாளரும், குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான சின்னத்துரை, மாவட்ட செயலாளர் ஜெயசுதர்ஷன் ஆகியோர் தகவல்
குமரி மேற்கு மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகள் மொத்தம் 912 பூத்துகள் உள்ளன. ஒவ்வொரு பூத் வாரியாக 9 பேர் கொண்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய பட்டியல் சரிபார்க்கப்பட்டு தலைமை கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் வகையில் அதிமுக தலைமை கழகம் சார்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறன தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் சமூக வலைதளங்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் தீட்டபட்டு வருகின்றன. ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள பூத்துகளில் உள்ள பொறுப்பாளர்களுக்கும் ஒன்றிய செயலாளர்கள்,நகர செயலாளர்கள், பேருராட்சி செயலாளர்கள், ஊராட்சி பொறுப்பாளர்கள், கிளை கழக செயலாளர்கள் ஆகியோர்களுக்கு பயற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
10 பூத்துகளுக்கு ஒரு சென்டர் என்ற முறையில் பூத் பொறுப்பாளர்களை ஒன்றினைத்து பயிற்சி அமைக்கப்படும். இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்க்காக கழக பொது பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆலோசனையின் பேரில் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அன்பு அங்கப்பன், திருநெல்வேலி மாவட்ட மாநகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சம்சுசுல்தான், இணை செயலாளர் கமலோஷ் பாண்டியன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்கள் தலைமையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்த பயிற்சியானது ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் பூத் பொறுப்பாளர்களுக்கு அளிக்கப்படும்.
கரூரில் நடந்த துயர சம்பவம் போன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்தியாவில் இதுவரைக்கும் நடந்தது இல்லை. ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் 41 பேர் நெருசலில் சிக்கி உயிர் இழந்தனர். த.வெ.க தலைவர் நடிகர் விஜய் பேசுவதற்காக வேறு மைதானத்தை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டு உள்ளனர். ஆனால் போலீசார் இந்த குறுகலான இடத்தை கொடுத்து உள்ளனர். நடிகரை பார்ப்பதற்காக அதிகமான கூட்டம் வருவது தெரிந்து போதுமான போலீசாரை பாதுகாப்புக்கு அமர்த்தி இருக்க வேண்டும். ஆனால் முழுமையான அளவில் போலீசார் அங்கு இல்லை.
தற்போது ஒரு நபர் கமிஷன் அமைத்து உள்ளனர். ஆனால் இது வெறும் கண்துடைப்பு நாடகம். கரூர் சம்பவத்தை வைத்து திமுகவினர் அரசியல் செய்து வருகின்றனர். இது ஒரு திட்டமிட்ட சதி என்பது தான் தெரிகிறது. பொது மக்களின் நலன் கருதி உடனே சிபிஐ விசாரனை அமைக்க வேண்டும் அல்லது தமிழகத்தை தவிர்த்து வெளி மாநில போலீசாரை வைத்து விசாரிக்க வேண்டும். அப்போதுதான் இதில் உள்ள உண்மைகள் வெளி கொண்டு வர முடியும்.
தமிழகத்தில் அதிகம் பேர் படித்த மாவட்டம் என்ற பெருமையை குமரி மாவட்டம் பெற்று இருக்கிறது இந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள் ஆனால் இங்கு படித்த இளைஞர்கள் வேலை வாய்புக்காக வெளி மாவட்டம் அல்லது வெளி மாநிலம் செல்ல வேண்டும் திமுக ஆட்சி அமைத்து நான்கரை ஆண்டுகள் ஆகிறது ஆனால் இந்த மாவட்டத்திற்க்கு பெரிய அளவில் தொழிற் நிறுவனங்கள் இல்லை திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரப்பர் பூங்கா அமைக்கலாம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள் இதுவரைக்கும் எதுவும் செய்யவில்லை. இவ்வாறு மாநில அமைப்பு செயலாளரும் குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான சின்னத்துரை பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சலாம், பொருளாளர் சில்வஸ்டர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சக்கீர்உசேன், பொதுக்குழு உறுப்பினர் செந்தமிழ்வாசன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயதாஸ், ஜீன்ஸ், நிமால்,ஜார்ஜ், புரூஸ்லி கோபால், ஷைன் ஜோஸ், மணி, எட்வின் ராஜ்குமார், நகர செயலாளர் டேனியல், ஆன்றோ, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஜாண், மகளிர் அணி செயலாளர் கிளாடிஸ் லில்லி , சிறுபாண்மை அணி செயலாளர் ரெஞ்சித் குமார், மாணவர் அணி செயலாளர் சுமன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஷாஜின், விவசாய அணி செயலாளர் மஹாஜி செல்வகுமார், இலக்கிய அணி செயலாளர் சுகுமாரன், இலக்கிய அணி பொருளாளர் விஜயகுமார், பேரூர் செயலாளர்கள் வினோத் டேனியல், விஜூகுமார், ஜெஸ்டின்ராஜ், மோகன் குமார், ரிச்சர்ட்பால் டேனியல், சசிகுமார், ஜெனில்ராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் கிஷோர், இணை செயலாளர் ரெஜிகுமார், தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் ரெஞ்சன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் விஜய் சந்திரன்,துணை செயலாளர்கள் பிரதீப், பிரதீப்குமார், ஒன்றிய துணை செயலாளர் அண்ணா, திருவட்டார் பணிமனை செயலாளர் சதீஸ், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்



