தஞ்சாவூர், ஏப்ரல் 20 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்ட களப்பணியாளர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டர்மான பிரியங்கா பங்கஜம் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்ட களப்பணியாளர்களுடன் மாற்றுத் திறனாளிகள் பிரெயிலி முறையில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.



