தருமபுரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற நகர கழக சார்பில் 12 ,13 வார்டுகளில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வார்டு செயலாளர்கள் அர்ஜுனன், வடிவேல் ஆகியோர் ஏற்பாட்டில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர கழகச் செயலாளர் பூக்கடை ரவி, அசோகன் மற்றும் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.



