By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இன்று மாலை கோட்டார் சவேரியார் பேராலயத்தில் பிஷப் தலைமையில் சிறப்பு ஆராதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இன்று மாலை கோட்டார் சவேரியார் பேராலயத்தில் பிஷப் தலைமையில் சிறப்பு ஆராதனை
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

இன்று மாலை கோட்டார் சவேரியார் பேராலயத்தில் பிஷப் தலைமையில் சிறப்பு ஆராதனை

Last updated: December 2, 2025 5:31 pm
December 2, 2025
39 Views
Share
SHARE

நாகர்கோவில், டிசம்பர் 2 –

கோட்டார் சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் திருப்பலி மற்றும் மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலி ஆகியவை நடைபெற்று வருகின்றன. கடந்த ஒன்றாம் தேதி (நேற்று) எட்டாம் திருவிழா நடந்தது. இதையொட்டி மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. பின்னர் இரவில் தேர்பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். பேராலய வளாகத்தில் இருந்து காவல் தூதர், புனித செபஸ்தியார் மற்றும் புனித சவேரியார் ஆகிய 3 தேர்கள் மேள தாளங்கள் முழங்க வலம் வந்தன. தேருக்கு பின்னால் கும்பிடு நமஸ்காரம் செய்து பக்தர்கள் நேர்ச்சை நிறைவேற்றினர். உப்பு, மெழுகுவர்த்தியும் காணிக்கையாக வழங்கினர்.

இன்று (2ம் தேதி) ஒன்பதாம் திருவிழா நடந்தது. இதையொட்டி மாலையில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடந்தது. இரவு தேர் பவனி நடைபெற்றது. இன்று மாலையிலிருந்து அதிகளவில் ஆலயத்துக்கு பக்தர்கள் வந்தனர். குமரி மாவட்டம், மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும், திருவனந்தபுரத்தில் இருந்தும் அதிகம் பேர் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

நாளை (3ம் தேதி) பத்தாம் திருவிழாவாகும். காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலி, கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடக்கிறது. காலை 8 மணிக்கு மலையாள திருப்பலி, பின்னர் காலை 11 மணிக்கு தேர் பவனி நடக்கிறது.

இன்றும், நாளையும் அதிகளவில் மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் நாகர்கோவில் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று (2ம் தேதி) மதியம் ஒரு மணி முதல் நாளை (3ம் தேதி) இரவு திருவிழா முடியும் வரை அமலில் இருக்கும். 10ம் திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை ஆகும்.

விளம்பரம்

You Might Also Like

3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை
தக்கலை அருகே தீப்பிடித்து எரிந்த செல்போன் கோபுரம்
மாரண்டஅள்ளியில் கஞ்சா, மது விற்ற மூன்று பேர் கைது
குமரி முழுவதும் விடிய விடிய மழைபெருஞ்சாணி அணை நீர்மட்டம் 53 அடியானது
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1 லட்சத்து 71 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

கீழ் புள்ளியல் துறை அலுவலகம் சார்பில் தூய்மை பணிகள்

June 27, 2024
83 Views
பதிவாளரை தாக்கியவரை தேடும் போலீஸ்
ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை கூட்டம்
கோடை மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ள
புறவுலக சிந்தனையற்றோர்(ஆட்டிசம்) விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account