களியக்காவிளை, டிச. 22 –
களியக்காவிளை அருகே மேக்கோட்டில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் தென்னந்தோப்பு உள்ளது. இந்த தென்னந்தோப்பில் தென்னை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. தென்னங்கன்றுகள் நடவு செய்து சுமார் ஐந்து வருடங்கள் ஆகியுள்ளது.
இந்த நிலையில் ஒரு தென்னை மரத்தின் மூட்டு பகுதியில் இருந்து வாழை மரங்களுக்கு கன்று முளைப்பது போல தென்னங்கன்று முளைத்து வளர்ந்து வருகிறது. சாதாரணமாக வாழை மரத்திலிருந்து மரத்தின் மூட்டில் இருந்து வாழைக்கன்றுகள் முளைப்பது வழக்கம். தென்னை மர மூட்டில் இருந்து தென்னை கன்றுகள் முளைப்பதில்லை.
இயற்கைக்கு மாறாக தென்னைமூட்டு பகுதியில் இருந்து தென்னை கன்று முளைத்த சம்பவம் அப்பகுதியில் காட்டுதீ போல் பரவியது. இது இயற்கை விவசாயத்தில் நிகழ்ந்த ஒரு சாதனை ஆகும். இந்த அற்புத தென்னை மரக்கன்றினை அப்பகுதியினர் பார்த்து வியந்து மகிழ்ச்சியில் உள்ளனர்.



