அஞ்சுகிராமம், நவ. 26 –
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமனம் செய்ய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்படி அஞ்சுகிராமம் பேரூராட்சியில் நியமன உறுப்பினராக மேட்டு குடியிருப்பு பகுதியை சார்ந்த சமூக சேவகரும், பட்டிமன்ற நடுவருமான ராஜமணி தேர்ந்து எடுக்கப்பட்டு பதவியேற்று கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா கிரேஸி, பேரூராட்சி தலைவர் ஜாணகி, துணைத்தலைவர் காந்தி ராஜ், திமுக பேரூர் செயலாளர் இளங்கோ, பேரூராட்சி கவுன்சிலர்கள் வீடியோ குமார், நீலகண்ணன், திமுக நிர்வாகிகள் சுயம்பு, அஞ்சை லிங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கவுண்சிலர் ராஜமணியை கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி செல்வக்குமார், காங்கிரஸ் தெற்கு வட்டார தலைவர் வக்கீல் சாம் சுரேஷ்குமார், ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலய நிர்வாக குழு தலைவர் வாரியூர் நடராஜன் பாராட்டினர்.



