தருமபுரி, ஜூலை 23 –
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி ஒன்னப்பகவுண்டன அள்ளி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சிவசுப்பிரமணிய சிவா அவர்களின் 101 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் மலர்மாலை வைத்தும், அவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இதில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் பிருந்தா நடராஜன், பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, பென்னாகரம் வட்டாட்சியர் ஆறுமுகம் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



