நாகர்கோவில், மார்ச் 26 –
நாகர்கோவில், வடசேரி கிருஷ்ணன் கோயில் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் மகள் ரித்திகா (18). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக ரித்திகா கல்லூரிக்கு செல்லாமல் ஒரு அச்சகத்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
சம்பவ தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவர் தந்தை முத்துக்குமார் மகளின் செல்போனை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் வேலை செய்த இடம், உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்தும் ரித்திகாவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுபோன்று புதுக்கடை அருகே அம்சி பகுதியை சேர்ந்தவர் பெனிஸ்மா (19). இவர் பிளஸ் டூ படிப்பை முடித்துள்ளார். சம்பவ தினம் உறவினர் ஒருவர் திருமண நிகழ்ச்சியில் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் புதுக்கடை போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


