நாகர்கோவில், மார். 7 –
நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு எஸ் ஐ ரவிச்சந்திரன் தலைமையில் வடசேரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மயிலாடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த தாமஸ் காட்வின் (44) என்பவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து போலீசார் அவரை சோதித்தனர்.
சோதனையில் தாமஸ் காட்வினிடம் உயர்ரக போதை பொருளான மெத்தம் பேட்டமின் 4 கிராம் மற்றும் 10 கிராம் கஞ்சா போன்றவை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து தாமஸ் காட்வினை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர் பெங்களூருவில் இருந்து இந்த பொருட்களை வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்து, வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.



