தருமபுரி, ஜன. 29 –
தருமபுரி மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் கிருஷ்ணாபுரம் கலைஞர் திடலில் மொழிபோர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர்.பி.பழனியப்பன்,மாநில இலக்கிய அணி துணை செயலாளர் வழக்கறிஞர் ஆடுதுறை மு.உத்ராபதி,தலைமை கழக பேச்சாளர் சென்னை அரங்கநாதன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் கழக இளம் பேச்சாளர் கொ.ரமேஷ் ஆகியோர் வீரவணக்க நாள் எழுச்சி உரையாற்றினர்.
மாநில இலக்கிய அணி துணை செயலாளர் வழக்கறிஞர் ஆடுதுறை மு.உத்ராபதி பேசுகையில்:
திராவிட மாடல் என்ன செய்தது என்று வரலாறு தெரியாதவர்கள் கேட்கின்றனர். இடுப்பில் துண்டை கட்டி ஒடுக்கி வைக்கப்பட்ட மக்களை தோளில் துண்டு போட வைத்தது திராவிட மாடல் தான் அதனை மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர்.அதற்கு இந்த கூட்டத்திற்கு வயதானவர்களும், இளம் வயது மாணவர்களும் ஒரு சேர திரண்டு வந்துள்ளதே உதாரணம்.
மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் போட்டு கொக்கரிகின்றனர் தேர்தலுக்கு மட்டும் மக்களை சந்திக்கும் தலைவர்கள்,இந்த கூட்டத்தினர் மட்டும் அல்ல இன்னும் எத்தனை பேர் சேர்ந்து எதிர்த்து வந்தாலும் அந்த சங்கி கூட்டத்தை முறியடிக்கும் வல்லமை பெற்றவர் நமது கழகதலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற மகத்தான தலைவர் மட்டுமே. அவருக்கு உறுதுணையாக சிங்கத்தின் குகையிலேயே சென்று அதை அடக்கும் திறமை பெற்ற இளைஞர் அணியினரும், அவர்களை சரியான முறையில் வழிநடத்தி வரும் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் நமக்கு இருக்கின்றனர்.
நமது திராவிட மாடல் ஆட்சியே பெண்களுக்கானது தான்.தந்தை பெரியார் பெண்கள் கையில் இருந்து கரண்டியை பிடுங்கி விட்டு கல்வியை கொடுக்க சொன்னார்.அந்த கல்வியை பெண்களுக்கு அளித்து அன்று சைக்கிள் ஓட்டினாலே தவறு என்று நினைத்தவர்களை விமானம் ஓட்ட வைத்து அழகு பார்த்தவர் நமது தலைவர்,அதனால் தான் இந்தியாவிலேயே பெண்களின் பேராதரவை பெற்றுள்ள ஒரே முதலமைச்சர் நம் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் என்ற சரித்திரம் இன்றைக்கு உருவாகி இருக்கிறது.
75 வருட பாரம்பரியம் மிக்க இந்த கட்சியை யாரும் தொட்டு பார்க்க கூட முடியாது. 2026 மட்டுமல்ல 2036 லும் செந்தமிழ் நாட்டை ஆளப்போவது நம் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான். ஏனென்றால் திரண்டு வந்துள்ள இந்த கூட்டத்தை பார்த்தால் இது வீரவணக்க நாள் கூட்டமா? அல்லது பாலக்கோடு,பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிகளின் வெற்றி விழா கூட்டமா? என்பதை போல இந்த கூட்டம் வந்திருக்கிறது.கண்டிப்பாக இந்த 2 தொகுதிகளிலும் நம்மை எதிர்த்து நிற்பவர்களை டெபாசிட் இழக்க வைத்து நாம் வெற்றி பெற இருக்கிறோம் என்பதை இங்கு திரண்டு வந்துள்ள தாய்மார்களை பார்க்கும் போதே எனக்கு தெரிகிறது.
நம்மை எதிர்த்து நிற்கும் அணிகளை நிலைமையை பாருங்கள். இராமதாஸ் அன்புமணியிடம் தன் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று சொல்கிறார். எடப்பாடி தலைமையில் உள்ள அ.தி.மு.க துண்டு துண்டாக இருக்கிறது. இவர்கள் எல்லாம் ஒரு கூட்டணியில் சேர்ந்து வருகிறார்கள் அது தேறாத கூட்டணி ஆகும்.
திமுக இன்றைக்கு மொழிபோர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி கொண்டிருக்கிறது,அந்த தியாகிகளின் தியாகத்தை நினைவுகூர்ந்து அவர்களை பெருமைப்படுத்தி கொண்டிருக்கிறது.இது தான் திராவிட மாடல்.இந்த வரலாறு தெரியாத எடப்பாடி எப்படி கட்சி நடத்துவார் தான் சம்பாதித்து வைத்ததை காப்பாற்ற தான் அவர் கட்சி நடத்தி வருகிறார் என்று அவர் பேசினார்.
இந்த பொதுகூட்டத்தில் மாவட்டஅவைத்தலைவர் கே.மனோகரன், மாநில நிர்வாகிகள் சூடப்பட்டி சுப்ரமணி, சத்தியமூர்த்தி, ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.பிரபுராஜசேகர், எம்வீடி.கோபால், சக்திவேல், முத்துக்குமார், சரவணன், முனியப்பன், மாது, மகளிர் அணி கவிதா மோகன்தாஸ், ஜெயா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மா.சந்தர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் இரா.முனுசாமி, சதாசுர்ஜித், பிரபு, புனிதா மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழகத்தினர் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



