நாகர்கோவில், ஜூன் 4 –
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுமான பொருட்கள் விநியோகம்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தளவாய் சுந்தரம் தலைமையில் கட்டுமான பொருட்கள் சில்லறை வியாபாரிகள் சார்பில் மாவட்ட எஸ்பியிடம் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறிருப்பதாவது: நாங்கள் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறோம். (சிமெண்ட், TMT கம்பி, M சாண்ட், ஜல்லி, செங்கல்) நாளது தேதி வரை கனரக வாகனம் (Tempo,Tarus Tipper) செல்லும் பாதை வசதி உள்ள அனைத்து இடங்களுக்கும் கல்குவாரி மற்றும் கிரஷர் தயாரிக்கும் இடங்களில் இருந்து உரிய அனுமதியோடு (pass) நேரடியாக எங்கள் வாகனங்கள் மூலம் கட்டுமான நடைபெறும் இடத்திற்கு நேரடியாக விநியோகம் செய்கின்றோம்.
இந்நிலையில் அதிகப்படியான கட்டுமானங்கள் நடைபெறும் இடங்கள் மிகவும் குறுகலான சாலை பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த சாலைகளில் எங்களது சிறிய வாகனங்கள் (TATA ACE/LOAD AUTO) பயன்படுத்தி வருகிறோம். மேலும் சிறிய அளவில் புனரமைக்கப்பட வேண்டிய பணிகளுக்காக கட்டுமானப் பொருட்களின் தேவை மிகச் சிறிய அளவில் தேவைப்படுவதால் ஒரே வாகனங்களில் செங்கல், சிமெண்ட், ஜல்லி, எம் சாண்ட் கொண்டு அளவுகளில் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்ட கட்டுமானதாரர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறோம்.
இந்தப் பணிகளுக்காக கட்டுமான பொருட்களை ஏற்றி இறக்குதல் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மற்றும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் தங்களிடம் இருக்கும் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு சிறிய அளவு கட்டுமானப் பொருட்களை வாங்கி தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.
எனவே, அனைத்து தரப்பினர் நலன்களையும் கருத்தில் கொண்டு சிறிய ரக வாகனங்களில் கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



