மார்த்தாண்டம், பிப். 20 –
குமரி மாவட்டம் சுருளோடு, கஞ்சிகுழி விளை மலை பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற அமைச்சர் மனோ தங்கராஜ் 360 மீட்டர் உயரத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பில் முல்லை பார்க் மலையேற்ற சுற்றுலா மற்றும் தியான மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதன் மூலம் மலையேறி வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசிக்க முடியும் என்று அறிவித்து, வனதுறையினருடன் இணைந்து இதற்கான முயற்சிகளை நடத்தி வருகின்றனர்.
இது போல் வேளிமலை வள்ளிசுனை மலையில் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கிறிஸ்தவ அடையாளத்தை அமைத்துள்ளார். அங்கும் டிடக்கிங் செல்ல சுற்றுலா மேம்பாட்டு செய்வதாக அமைச்சர் அறிவித்துள்ளார். இதன் மூலம் கிறிஸ்தவ மதத்தை வளர்க்க கிறிஸ்தவ அடையாளங்களை நிறுவ அமைச்சர் துணை போகிறார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் இந்த நடவடிக்கைகளை உடனே கைவிடாவிட்டால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு முதல்வர் வரும் போது கறுப்பு கொடி காட்ட போவதாக இந்து முன்னணி மாநில பொது செயலாளர் முருகானந்தன் அறிவித்து உள்ளார்.



