மதுரை, ஜூலை 9 –
மதுரை அறிஞர் அண்ணா மாளிகையில் தூய்மை பணியாளர்கள் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் விசிக தூய்மை பணியாளர் மேம்பாட்டு சங்கம் மாநில செயலாளர் போஸ் தலைமையில் துணை செயலாளர் நெடுஞ்செழியன் முன்னிலையில் மற்றும் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து 2 ஆயிரத்திற்கு மேற்ப்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி நிர்வாகத்தில் பல கோடி முறைகேடு, அவர் லேண் நிறுவணடெண்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் தொழிலாளர்கள் காலை 6.30 மணிக்கு கையழுத்து வாங்குவதை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.



