தருமபுரி, ஜூன் 25 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அணைத்து துறை அரசு அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சரவணன் துறை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்து கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள், பணிகள் குறித்து, நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் பாலக்கோடு எம்.எல்.ஏ கே.பி.அன்பழகன், பென்னாகரம் எம்.எம்.ஏ கஜேந்திரன், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. மரகதம் வெற்றிவேல் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



