கன்னியாகுமரி, ஜன. 29 –
குமரி மாவட்டம் மயிலாடி றிங்கல்தௌபே மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் நிலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித்தாளாளர் ஜெரோம் எமில் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் புஷ்பலதா, மயிலாடி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சாய்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் பெனிலாஹேன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலை இல்லா நிதி வண்டியை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர் மன்ற செயலாளர் ஜான் ஸ்டீபன், கவுன்சிலர் சிவசங்கர் திமுக நிர்வாகிகள் ஆனந்த், இயேசு பாதம், பொன்னம்மாள், டேவிட், மாதவன் பிள்ளை, கண்ணன், முருகன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



