தென்காசி, ஜூலை.17
தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்வராஜ் தலைமையில் தென்காசி நகர காங்கிரஸ் கட்சியினர் கர்மவீரர் காமராஜர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் கரும் பலகையில் கைரேகை பதிவு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், தென்காசி மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி பூமாதேவி, தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், துணைத் தலைவர் சித்திக், நகர பொருளாளர் ஈஸ்வரன், ஜேம்ஸ், ஆறுமுகம், வழக்கறிஞர் சிவா, நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



