சேலம், ஜூன் 8 –
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா சித்தூர் கிராமத்தில் வசித்து வரும் சமூக ஆர்வலர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் என்பவர் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடை சித்தூர் – பூலாம் பட்டி முக்கிய பிரதான சாலையில் அலுவலகங்கள், பள்ளிக்கூடம், கோவில்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் கடை எண்: 7250 அரசின் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருவதால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் பெண்கள் அந்தப் பாதையில் செல்ல மிகவும் அச்சப்படுகிறார்கள். குடிமகன்கள் குடித்துவிட்டு ஆடைகள் களைந்த நிலையில் அறுவருக்கத் தக்க பேச்சுக்களை பேசுவதால் பெண்கள் அந்த வழியாக செல்ல முடிவதில்லை. மேற்கண்ட மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றி தருமாறு பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு மனு அளித்தார்.



