திருச்சி, மார்ச் 19 –
மணப்பாறை அருகே பண்ணப்பட்டி கிராமத்தில் வீட்டுக்குச் செல்லும் பாதை தொடர்பாக பழனிச்சாமி, சின்னச்சாமி இடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பழனிச்சாமிக்கு தலையில் ஐந்து தையல்கள் போடப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சின்னசாமியின் தங்கை லட்சுமிக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழனிச்சாமியைத் தாக்கிய மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



