களியக்காவிளை, ஏப். 27 –
கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் எடத்துவா பகுதியில் புனித ஜார்ஜியார் திருத்தலம் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்திப்பெற்ற இந்த எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தலத்திற்கும் தமிழகத்திற்கும் நீண்டகால தொடர்பு உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிகம் போன்ற பல்வேறு தேவைகளுக்காக ஆலப்புழை மாவட்டத்திற்கு சென்று வந்த பொதுமக்கள் புனித ஜார்ஜியார் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வருவது வழக்கமாக உள்ளது.
எனவே, பல நூற்றாண்டுகள் கடந்த பின்பும் தற்போதும் இந்த திருத்தலத்தில் முதல் 10 நாட்கள் தமிழக மக்களுக்கு என்றே விழா கொண்டாடப்பட்டு வருகிறது. எஞ்சிய 10 நாட்கள் கேரள மாநில மக்களுக்காக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் மே 14ம் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் தமிழிலில் திருப்பலி, காலை ஜெபம், திருபுகழ்மாலை நடக்கிறது. விழா நாட்களில் கர்தினால் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரி, ஆயர்கள் மார் ஜார்ஜ் ராஜேந்திரன், ஜூடு பால்ராஜ், பீட்டர் ரெமிஜியூஸ், பால் ஆன்றனி, மாத்யூஸ், ஜோசப் பெருந்தோட்டம் மற்றும் அருட் பணியாளர்கள் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. எட்டாமிடம் வரும் 14ம் தேதி திருப்பவனியுடன் விழா நிறைவடைகிறது. விழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இருந்து சிறப்பு பேருந்து சேவை செய்யப்படுள்ளது.



