தக்கலை, செப். 27 –
தக்கலை அருகே உள்ள மேகமண்டபகுதியில் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த கார்த்திக் (38) என்பவர் அவரது மனைவி ஜோதிலட்சுமியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கார்த்திக் மேக்கா மண்டபத்தில் சலூன் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் சம்பவ தினம் கார்த்திக் சலூன் கடையை பூட்டிவிட்டு சென்றவர் பின்னர் வீட்டிற்கு செல்லாமல் மாயமானார்.
வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த ஜோதிலட்சுமி கணவரை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எங்கும் கார்த்தி குறித்த தகவல் கிடைக்கவில்லை. இது குறித்து ஜோதிலட்சுமி தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கார்த்திகை தேடி வருகின்றனர்.



