திருப்பூர், ஜூன் 16 –
திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-1, 15 வேலம்பாளையம், செட்டிபாளையம் பகுதிகளில் உள்ள 33 வணிக நிறுவனங்களில் இன்று (16.06.2026) தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் 85 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 9 வணிக நிறுவனங்களுக்கு ரூ.32,000 அபராதம் விதிக்கப்பட்டது. உடன் சுகாதார ஆய்வாளர்கள் கோகுலநாதன், ஜானகிராமன், அருண்பாண்டி, கீர்த்தனா, மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.



