தருமபுரி, அக். 15 –
தருமபுரி அடுத்த பையசுஅள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இயற்பியல் துறை சார்பாக இரண்டு நாள் “பொருட்களில் இயற்பியலின் சமீபத்திய முன்னேற்றம் குறித்த தேசிய பட்டறை” என்ற தலைப்பில் நடைபெற்றது. நிகழ்வில் முனைவர் செல்வ பாண்டியன் இயற்பியல் துறை தலைவர் இயக்குனர் பொறுப்பு அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார். முனைவர் பிரசாத் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினராக முனைவர் குடென்னவர் பிரஸ்ட் பல்கலைக்கழகம் பெங்களூர் “கதிர்வீச்சுப் பொருட்களில் சமீபத்திய முன்னேற்றங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முனைவர் அறிவானந்தன் அண்ணா பல்கலைக்கழகம் சென்னை
“வெப்ப மின் பொருட்களின் இயற்பியல்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முனைவர் கோபாலகிருஷ்ணன் நன்றி உரை வழங்கினார். முனைவர் செந்தில் உடனிருந்தனர். இயற்பியல் துறை சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.



