கோவை, மார்ச் 26 –
தென் இந்தியாவின் பிரமாண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி ‘ரினியூஎக்ஸ் 2026’: சென்னை வர்த்தக மையத்தில் ஏப்ரல் 27 முதல் 29 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
“ஒரு தசாப்தத்தின் தாக்கம், அபரிமிதமான எதிர்காலம்” என்ற தலைப்பில் நடைபெற உள்ள ‘ரினியூஎக்ஸ் 2026 கண்காட்சியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை வரவேற்க காத்திருக்கிறது. மேலும், சூரிய ஒளி மின்சாரம், எரிசக்தி சேமிப்பு, உயிரி-எரிசக்தி, ஸ்மார்ட் கிரிட்கள் மற்றும் இதற்கான தீர்வுகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள அதிநவீன முன்னேற்றங்கள் குறித்து 200-க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகள் இதில் காட்சிப்படுத்த உள்ளன. ஸ்வெலெக்ட் எனர்ஜி, விக்ரம் சோலார், எம்வி, இவால்வ் கிரீன், கௌதம் சோலார் யாரி எனர்ஜிஸ், க்ரூ சோலார், கோல்டி சோலார் வாட்பவர், டெய், பெஸ்டன் மற்றும் ரூப்சோல் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் இதில் பங்கேற்க உள்ளன.
தொழில்துறை வட்டமேசை மாநாடு கண்காட்சிக்கு முன்னதாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையைச் சேர்ந்த முக்கிய நபர்கள் பங்குபெற்ற ‘தொழில்துறை வட்டமேசை மாநாடு’ இன்று கோவையில் உள்ள ரெசிடென்சி டவர்ஸில் நடைபெற்றது. இதில் இந்தத் துறையின் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் புதிய வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த வட்ட மேசை மாநாட்டில் பல முன்னணி தொழில்துறை தலைவர்கள் தமிழ்நாடு மின் துகசவோர் சங்கத் தலைவர் சந்தோஷ், எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குளர் மற்றும் துனைாத் தலைவர் செல்லப்பன், கேஆர்ஜி சோலார் இயக்குனர் சிவசாம் கோளா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்முனைவோர் மற்றும் ஊக்குவிப்பாளர்கள் சங்கத் தலையா டொன்ஸ் அலெக்ஸ், தமிழ்நாடு சூரிய ஒளி மின்சக்தி மேம்பாட்டாளர்கள் சங்க தலைவர் சிவக்குமார். இன்பார்மா மார்க்கெட்ஸ் இந்தியா எரிசக்தி மற்றும் கட்டுமானப் பிரிவு முத்த குழு இயக்குனர் ரஜனீஷ் கட்டார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரினியூாக்ஸ் 2026 கண்காட்சி அறிவிப்பு குறித்துப் பேசிய ‘இன்பார்மா மார்க்கெட்ஸ் இன் இந்தியா நிறுவனத்தின் மூத்த குழு இயக்குனர் ரஜ்னீஷ் கட்டார் கூறுகையில், தூய்மையான எரிசக்தியைப் பயன்படுத்துவதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உருவெடுத்துள்ளது. மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறும் இந்தியாவின் பயணத்தில் தன்னை முன்னிலையில் நிறுத்தியுள்ளது. 2030ம் ஆண்டுக்கும் தூய்மையான எரிசக்தியில் தேசிய அளவில் தலைசிறந்து விளங்க வேண்டும் என்ற உறுதியான தொலைநோக்குப் பார்வையுடன், காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரம் என சாதனைகளைப் படைத்து மாநிலத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை புதிய இரண்டிலும் குறிப்பிட உச்சங்களை எட்டியுள்ளது.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதில் முன்னோடியாக உருவெடுத்துள்ளது. அக்டோபர் 2025 நிலவரப்படி 1,000 மேற்பட்ட வீடுகளில் சோலார் மின் பலகைகளை நிறுவி, மாநிலத்திலேயே முதலிடத்தில் உள்ளது.



