கோவை, ஜூன் 08 –
ப்ரைட்ஸ் ஆப் பிரெஸ்டிஜ் அவார்ட்ஸ் ரெகோக்நிஷன் பெடரேஷன் அமைப்பின் சார்பில் ஏசியன் அவார்ட் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை கௌரவிக்கும் நோக்கில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மேட்டுப்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பாஸ்கர்,கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் கதிர்வேல்,அரசுப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் டாக்டர் கோவிந்தராஜ் ஏ.வி.பாலா மருத்துவமனையின் டாக்டர் அருண்குமார் டி.சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பட்டய கணக்காளர் ஆர்.சதீஷ், ரைட்ஸ் இன்டர்நேஷனல் குழுமத்தின் கூடுதல் தலைவர் டாக்டர் அரவிந்த்குமார் ஏ.எஸ்.ஸ்ரீ சாய் புரொஃபெஷனல் அகாடமி நிறுவனர் கலைய்பிரியா குமரேசன் மற்றும் அகில இந்திய தனியார் பல்கலைக்கழக சங்கத்தின் டீன் டாக்டர் மகேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் கல்வி, சமூக சேவை, தொழில், மருத்துவம் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்றவர்களை சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி வாழ்த்தினர். இந்நிகழ்ச்சி சமூக முன்னேற்றத்திற்கும்,திறமையாளர்களை ஊக்குவிப்பதற்கும் முக்கிய பங்காற்றும் வகையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் சர்வதேச உரிமைக்குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் கலந்துகொண்டு கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.



