By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள் விதிமுறைகளை மீறி பல மணி நேரம் அலைக்கழிக்கப்படும் அவலம்: மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள் விதிமுறைகளை மீறி பல மணி நேரம் அலைக்கழிக்கப்படும் அவலம்: மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள் விதிமுறைகளை மீறி பல மணி நேரம் அலைக்கழிக்கப்படும் அவலம்: மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

Last updated: July 11, 2026 4:12 pm
July 11, 2026
8 Views
Share
SHARE

புதுக்கடை, ஜூலை 11 –

குழித்துறை அரசு மருத்துவமனையில் மாதாந்திர பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களை டாக்டர்களின் ஈகோ பிரச்சனையால் பல மணி நேரம் அலக்கழிக்கப்படுவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் சுகாதார துறையின் மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநகரத்தின் கீழ் மாவட்ட தலைமை மருத்துவமனை உட்பட 9 அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், ஸ்கேன் சென்டர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் மகப்பேறு சிகிட்சைக்காக தக்கலை, பூதப்பாண்டி, குழித்துறை, ஆசாரிப்பள்ளம் போன்ற மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் நூற்றுக்கணக்கான பெண்கள் பிரசவத்திற்கு இலவச சிசிட்சைக்காக வந்து செல்கின்றனர்.

குமரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு அதிக அளவில் பெண்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக குமரி மேற்கு மாவட்ட பகுதியான குழித்துறை அரசு மருத்துவமனையில் 2 மகப்பேறு மருத்துவர்களின் ஈகோ பிரச்சனை காரணமாக புற நோயாளிகள் பிரிவில் கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதில் குறிப்பாக மாதாந்திர பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணி பெண்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. இந்த மருத்துவமனையில் கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட நோயாளிகள் அதிக அளவில் பயன் பெறுகின்றனர். குறிப்பாக மலையோர கிராமங்களான ஆறு காணி, பத்துகாணி உள்ளிட்ட பல கிராம மக்கள், கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட நீரோடி, தூத்தூர், வள்ளவிளை, தேங்காப்பட்டணம் போன்ற கடலோர கிராம மக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் வந்து சிகிச்சை பெறுவது வழக்கம்.

குழித்துறை அரசு மருத்துவமனையில் தற்போது 24 மருத்துவர்கள், 48 செவிலியர்கள், 32 மருத்துவமனை பணியாளர்கள், 2 ஆய்வக நடத்துனர்கள், ஒரு கதிர்வீச்சு நுட்பனர் மற்றும் அலுவலக பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு பணிபுரிகின்றனர். இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும் 5 மகப்பேறு மருத்துவர்கள், பச்சிளம் குழந்தைகளுக்கான 4 மருத்துவர்கள் பணி புரிகின்றனர்.

கர்ப்பிணி பெண்களுக்கு மாதாந்திர பரிசோதனை செய்ய காலை 7.30 மணி முதல் வெளி நோயாளிகள் பிரிவுக்கு பயனர்கள் வருவது வழக்கம். இவர்களை காலை 12 மணிக்கு முன் அனைத்து பரிசோதனைகளையும் செய்து அனுப்ப வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் குறிப்பிட்ட 2 மகப்பேறு மருத்துவர்கள் தங்களுக்கு உள்ள ஈகோ பிரச்சனை காரணமாக கர்ப்பிணி பெண்களை பரிசோதிப்பதில் காலதாமதம் ஏற்படுத்தி வருகின்றனர். இதில் நீண்ட நேரம் கர்ப்பிணி பெண்கள் காத்திருக்கும் அவலம் நடைபெறுகிறது.

குறிப்பாக மலையோர கிராமம், கடற்கரை கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் 7 .30 மணிக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு வர வேண்டும் என்றால் அதிகாலை 5. 30 மணிக்கு முன்பாகவே தங்களது சொந்த பகுதியில் இருந்து பஸ் ஏறி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டர்களின் ஈகோ பிரச்சனை காரணமாக மருத்துவர்கள் சரியான நேரம் வருவதில்லை. சில நேரங்களில் 10 மணி முதல் 12 மணி வரை மகப்பேறு பிரிவில் மகப்பேறு மருத்துவர்கள் அமர்வதே கிடையாது. இதனால் மேலும் காலதாமதம் ஏற்படுகிறது.

புற நோயாளிகள் பார்வை நேரத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் மருத்துவர்களிடம் அதிக நேரம் அமர்ந்து, தனியார் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை நோயாளிகள் வாங்க செய்வதற்காக டீல் பேசுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதுபோன்று இந்த மருத்துவமனையில் வாரம் 3 முறை கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் செய்ய அனைத்து வசதிகள் உள்ளது. ஆனால் பல கர்ப்பிணி பெண்களை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் செய்யாமல், தனியார் ஸ்கேன் சென்டர்களுக்கு கட்டாயமாக அனுப்புவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

மேலும் இங்குள்ள மருத்துவர்கள் சிலர் தனியாக மருத்துவமனைகள் நடத்துவதாகவும் புகார் உள்ளது. மேலும் சில டாக்டர்கள் தனியார் மருத்துவமனைகளில் பார்வையாளர் பிரிவு சிகிட்சைக்கு செல்வதும் வழக்கமாக உள்ளது.

விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதி அரசு மருத்துவமனைகளில் வாரம் தோறும் புதன்கிழமை மட்டும் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடப்படுவது வழக்கம். ஆனால் குழித்துறை அரசு மருத்துவமனையில் 3 நாட்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி காலை 8 மணி முதல் 12:00 மணிக்குள் போட வேண்டும். ஆனால் சில மருத்துவர்கள் அலட்சியத்தால் மதியம் 2 மணி வரை தாமதமாக தடுப்பூசி போடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தாய்மார்கள் காலையிலே வந்து அமர்ந்து குழந்தைகளுடன் அவதிப்படுகின்றனர். பல தாய்மார்கள் காலையிலிருந்து தண்ணீரை குடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதார துறை அலுவலர் ஆகியோர் தனிக்கவனம் செலுத்தி, குழித்துறை அரசு மருத்துவமனை அவலங்களுக்கு காரணமான டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் அரசு மருத்துவமனைகளில் காலை மட்டுமின்றி, பிற்பகல் 3 முதல் 5 மணி வரை கர்ப்பிணிப் பெண்களுக்கான புற நோயாளிகள் பிரிவு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே பைக்கில் லாரி மோதல்
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித் திருவிழா
அஞ்சுகிராமம் சத்திய நகரில் பேரூந்து நிறுத்தப்பெயர் பலகை திறப்பு.
அண்ணாவின் 116 வது பிறந்த நாள்
இரயில்வே பணிகளை துரிதப்படுத்துவதற்கான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திட்டுவிளை அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கழிவறை

September 24, 2025
44 Views
புதிதாக கட்டப்பட்ட ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி
SDPI கட்சி கட்சியினர் விசிக கட்சியினர் ஆகியோர் இணைந்து மனு
சைதை மேற்கு ஜோன்ஸ் சாலையில் அதிமுக சார்பாக நீர், மோர் பந்தல் திறப்பு
சங்கரன்கோவிலில் விவசாயிகளுக்கான வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பயன்பாடு பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account