தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து ரூபாய் 76 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி கட்டடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் குத்துவிளக்கு ஏற்றினார். ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ், ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், சட்டக் கல்லூரி முதல்வர் ஜேம்ஸ் ஜெயபால் ஆகியோர் உடன் இருந்தனர்.



