மதுரை, ஜூலை 18 –
எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் மதுரை மாநகராட்சி மண்டலம் 3, வார்டு எண் 50ல் சிம்மக்கல், கோவிந்தன் செட்டி தெருவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உரிமைகள் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான”விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இம்மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிசியோதெரபி, உளவியல் ஆலோசனை, சிறப்புக் கல்வி, UDID அட்டை, அரசு நலத்திட்டங்கள், கல்வி உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஒரே இடத்தில் இலவசமாக வழங்கப்படுகின்றன.
மத்திய சட்டமன்ற உறுப்பினர் மதார் பதூருதின், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.கோபிசன், மாநகராட்சி மேயர்(பொ)/துணை மேயர் தி.நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.



