தருமபுரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் தருமபுரி நகராட்சியுடன் இலக்கியம்பட்டி ஊராட்சியை இணைக்கும் விடியா திராவிட முன்னேற்ற கழக அரசு கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட கழக செயலாளர் கே. பி. அன்பழகன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தருமபுரி நகர செயலாளர் பூக்கடை ரவி, தருமபுரி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ். ஆர். வெற்றிவேல், அன்பழகன், தகடு ர் விஜயன், சங்கர், அசோகன் மற்றும் இலக்கியம்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்றனர்.



