விளாத்திகுளம், பிப்ரவரி 26 –
தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் தேனம்மாள் முதியோர் இல்லத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு, விளாத்திகுளம் அரசு போக்குவரத்து அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பழம், பிஸ்கட், இட்லி, கேசரி உள்ளிட்ட உணவு பொருட்களை முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில்: அம்மாவின் பிறந்த நாளை நாங்கள் பல்வேறு வகையில் கொண்டாடினாலும் கூட எங்களுக்கு அம்மா அவர்கள் சொன்னது, என்னுடைய பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடாமல் மக்களுக்கு பயனுள்ள வகையில், ஏழை எளிய மக்களுக்கு முதியோர்களுக்கு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தால்தான் எனக்கு வளங்களைத் தரும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியதை நினைவு கூர்ந்து கடம்பூர் ராஜு பேசினார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்டம் முன்னாள் கவுன்சிலர் சத்யா, வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் குட்லக் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் பால்ராஜ், போடுசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் ராமநாதன், பிரவீன், அண்ணா போக்குவரத்து தொழிலாளர் சங்க செயலாளர் கண்ணன், பொருளாளர் செல்வகுமார், பாலமுருகன் பிச்சைமாரியப்பன், ராமசின்னு, சண்முகராஜ், சந்தனமகாலிங்கம், மதுரை வீரன் உட்பட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



