மதுரை மே 31
மதுரை
அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் உண்டியல் திறப்பு திருக்கோவிலின் துணை ஆணையர்/ செயல் அலுவலர் யக்ஞ நாராயணன், தலைமையில் மதுரை கூடலழகர் பெருமாள் திருக்கோயில் உதவி ஆணையர் பிரதீபா , ஆய்வர் சாவித்திரி திருக்கோவிலின் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாண்டியராஜன், மீனாட்சி பிரியாந்த் , அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், அருணாதேவி, பி.ஆர்.ஓ. முருகன். ஆகியோர் முன்னிலையில்
திறக்கப்பட்டது.
அதன் பின்னர் எண்ணிக்கை நடைபெற்றது.
அந்த வகையில் பக்தர்களின் காணிக்கையாக ரூபாய் 55,40,624/- ரொக்கமும் மற்றும் தங்கம் 19 கிராம், வெள்ளி 340 கிராம் ஆகியன கிடைக்கப் பெற்றதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



