தருமபுரி, ஜூன் 29 –
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி தவெக சார்பில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாளை வெகு விமர்சியாக கொண்டாடினர். பாப்பாரப்பட்டி நகர செயலாளர் ரமேஷ் தலைமையில் அந்த பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில், பள்ளியில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்தும், பதக்கம் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினர்.
இதனைத் தொடர்ந்து 52 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கி, பிறந்த நாளை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சி பென்னாகரம் ஒன்றிய செயலாளர் ரஞ்சித், பாலக்கோடு ஒன்றிய செயலாளர் குமார், கொள்கை பரப்பு மாவட்ட அமைப்பாளர் சந்தோஷ், பாப்பாரப்பட்டி தவெக நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



