திருவெண்ணெய்நல்லூர், நவ. 22 –
திருவெண்ணெய்நல்லூரில் சிவனார்த்தங்கல் கிராம உதவியாளர் தற்கொலைக்கு நீதி கேட்டு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர் ஜாஹிதா பேகம் எஸ்.ஐ.ஆர் தேர்தல் திருத்தப் பணிச்சுமைகள் காரணமாக நேற்று முன் தினம் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த மரணத்திற்கு நீதி கேட்டு திருவெண்ணெய்நல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொது செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



