மார்த்தாண்டம், டிச.2 –
தக்கலை பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவரின் மகள் கோவையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் எம்.எஸ்சி இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4 மாதம் முன்பு விவசாயின் மனைவியும் மகளும் கல்லூரியில் செல்ல தனியார் ஆம்னி பேருந்தில் சென்றுள்ளனர். அப்போது பஸ் டிரைவர் களியக்காவிளை பகுதியை சேர்ந்த அனிஸ் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் தாய் மகளுடன் அன்பாக பேசி எந்த உதவி வேண்டுமாறு தயங்காமல் கேளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பிய தாய், மாணவி விடுமுறைக்கு வந்துவிட்டு செல்லும்போது அனீஸ் ஓட்டி செல்லும் பேருந்தில் அனுப்புவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 9ம் தேதி அனிஷ் ஒட்டிய பஸ்ஸில் ஸ்லீப்பர் பெட்டில் மாணவி தூங்கி கொண்டிருந்த போது அனிஷ் மாணவியை தட்டி எழுப்பி பிஸ்கட் சாப்பிட கொடுத்துள்ளார். மறுதினம் காலையில் இரண்டு பேருக்கும் எல்லாம் முடிந்து விட்டது என்று அனீஸ் கூறி உள்ளார். இதை யாரிடமாவது கூறினால் குடும்பத்துடன் கொன்றுவிடுவேன் என மிரட்டி உள்ளார்.
அதன் பிறகு மீண்டும் தனியாக வரவழைத்து இரண்டு நாட்கள் மாணவியை பலத்காரம் செய்துள்ளார். அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதை அடுத்து தாயாரிடம் மாணவி சம்பவங்களை கூறினார். அவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அனீஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



