சென்னை, மார்ச் 26 –
வாபியில் உள்ள மெரிலின் உலகளாவிய தலைமை அலுவலகத்தில் நடைபெற பட்ச்பனா ஓய்வு பெறக் கூடாது என்ற தலைப்பில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனி உரையாற்றினார். இதில் மூன்று தலைமுறைகள் உறவுகள் பற்றிய உரையாடல்கள் பகிரப்பட்டன.
இந்த மாபெரும் இயக்கத்தின் ஒரு குறிப்பிட்ட நீட்சியாக, “பட்ச்பனா ஓய்வு பெறக்கூடாது” பிரச்சாரமானது, “சிகிச்சை அவசியம்” என்ற தளத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கான ஒரு பிரத்யேக சுகாதார முன்னெடுப்பை அறிமுகப்படுத்துகிறது.
குறிப்பாக, இந்தியாவில் முதியோர்களிடையே வாழ்க்கை முறை தொடர்பான பாதிப்புகள் சீராக அதிகரித்து வரும் நிலையில், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கண்ணியத்தையும் உற்சாகத்தையும் பேணுவதன் முக்கியத்துவத்தை இந்தக் கலந்துரையாடல் எடுத்துக்காட்டியது.
இந்த பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து பேசிய எம்.எஸ். தோனி, “உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் இன்றியமையாததாகும். முதியவர்களின் நலன்களில்
இளைய தலைமுறையினருக்கு பங்கு உள்ளது. இதை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்ட வேண்டும். நம் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிக்கு அவர்கள் தகுதியான கவனிப்பு, கவனம் மற்றும் ஆதரவு கிடைப்பதை உறுதி செய்யும் பொறுப்பு நம் இளைய தலைமுறையினருக்கு உள்ளது. சிகிச்சை அவசியம் போன்ற முயற்சிகள் அந்த திசையில் ஒரு படியாகும். மேலும் இதில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று வலியுறுத்தினார்.



