திருச்சி, ஏப்ரல் 24 –
கரூர் மாவட்டம் புலியூரைச் சேர்ந்த டிப்ளமோ கெமிக்கல் இன்ஜினியர் மகதீஸ்வரன். லால்குடி அருகே உள்ள டால்மியா சிமெண்ட் ஆலையில் ஆய்வு செய்வதற்காக திருச்சி வந்துள்ளார். காவிரி பாலம் அருகே உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்த அவர், நீண்ட நேரம் வெளியே வராததால் லாட்ஜ் ஊழியர்கள் சென்று பார்த்தபோது மயங்கிய நிலையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


