தஞ்சாவூர், ஜூன் 8 –
தஞ்சாவூரில் 18 கோயில்களில் இருந்து வெண்ணெய் தாழி அலங்காரத்தில் பெருமாள் சுவாமிகள் மீது உள்ள நடைபெற்றது. தஞ்சாவூரில் கருட சேவையை முன்னிட்டு 27 கோவில்களிலிருந்து பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி ஒரே இடத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இந்த நிலையில், தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில் இருந்து உற்சவ பெருமாள் சுவாமிகள் வெண்ணெய் தாழி அலங்காரத தில் எழுந்தருளி தஞ்சாவூர் கீழ ராஜவீதிக்கு வந்தார். இதை போல் தஞ்சாவூர் மாநகரில் உள்ள நீலமேக பெருமாள், மணி குண்றா பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், ரங்கநாத பெருமாள், கோதண்ட ராமர், பிரசன்ன வெங்கடேச பெருமாள், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட மொத்தம் 18 கோவில் களிலிருந்து வெண்ணைத்தாழி அலங்காரத்தில் பெருமாள் சுவாமிகள் புறப்பட்டு, தஞ்சாவூரில் உள்ள கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகியவற்றில் வீதி உலா சென்ற பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வெண்ணெய்த்தாழி உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியவாறு சென்றனர்.



